விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சிக்காக தற்போது பல கட்டங்களாக முன்னோட்டங்கள் நடந்து வருகிறது. தற்போது எங்க ஏரியா உள்ள வராத என்ற நிகழ்ச்சியில் ஷிவாங்கி கண்கலங்கியுள்ளார். அந்த விடியோவை பார்த்த பலரும் ஷிவாங்கிக்கு ஆறுதலளித்து வருகின்றனர்.
ஷிவாங்கி
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் அறிமுகமானவர் ஷிவாங்கி. ஆரம்பத்தில் இவரை யாருக்கும் அவ்வளவாக தெரியாது. ஆனால் போக போக பாடுவது மட்டுமல்லாமல் தனது திறமையையும் வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனாலேயே அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது.
மாசு, மரு இல்லாத கிளியர் சருமம் வேண்டுமா?? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க!!
மிகவும் அப்பாவியாகவும், குழந்தை தனமாகவும் இருந்த ஷிவாங்கியை மக்களுக்கு பிடித்தும் போனது. இதனாலேயே ரசிகர்கள் மத்தியில் ஏக வரவேற்பை பெற்றார். முதல் சீசனில் குழந்தை தனமாக இருந்த ஷிவாங்கி இப்பொழுது வளர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அஸ்வினை பார்த்த நாளில் இருந்தே ஷிவாங்கி அவர் பின்னால் தான் சுற்றி கொண்டுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இப்படி ஜாலியாகவே பார்த்த ஷிவாங்கியின் இன்னொரு முகம் தெரிய வந்துள்ளது. விஜய் டெலிவிஷன் அவார்ட் முன்னோட்டமாக எங்க ஏரியா உள்ள வராதே என்ற நிகழ்ச்சி இந்த வாரம் நடைபெற உள்ளது. அதில் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அதாவது இவரது இந்த குரலை பார்த்து பலரும் கிண்டலடிப்பார்களாம். இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு தான் எல்லா பெரியவர்களும் எனக்கு ஆசிர்வாதம் தருகிறார்கள் என்று கண்கலங்கியுள்ளார். இதனை பொறுக்க முடியாமல் அவரது ரசிகர்களும் கண்கலங்கியுள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.