குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் டைட்டில் ஜெயித்திருந்தால், உண்மையிலேயே நான் மிகவும் வருத்தப்பட்டு இருப்பேன் என அதன் போட்டியாளர் பவித்ரா தெரிவித்துள்ளார்.
பவித்ரா ஓபன் டாக் :
விஜய் டிவியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீசன் 2 மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக கனி தேர்வு செய்யப்பட்டார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளரான பவித்ரா ஒரு பேட்டியில் பங்கேற்றார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
அப்போது அவரிடம், நிகழ்ச்சி குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், நிகழ்ச்சியின் நடுவர் தாமு எனக்கு அப்பா மாதிரி, ஷகிலா எனக்கு அம்மா மாதிரி கிட்டத்தட்ட நாங்க ஒரு குடும்பமாக தான் பழகினோம். உண்மையை சொல்லப்போனால் நான் டைட்டில் ஜெயித்திருந்தால் மிகவும் வருத்தப்பட்டு இருப்பேன்.
கடைசி வரை இந்த நிகழ்ச்சியில் வந்ததே எனக்கு பெரிய விஷயம். எனவே குக் வித் கோமாளி, என் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்திய ஒன்று என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.