குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின் பவித்ராவின் முதல் பதிவு – இணையத்தில் வைரல்!!

0

சென்ற வாரம் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பவித்ரா ரசிகர்ளுக்கு நன்றி கூறி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். பவித்ராவின் ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பவித்ரா ட்வீட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘குக் வித் கோமாளி சீசன் 2’ நிகழ்ச்சி முடிவுக்கு வந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் நான்கு போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்நிகழ்ச்சி இறுதி சுற்றுக்கு வரப்போகிறது. இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் இம்யூனிட்டி வீக் மற்றும் எலிமினேஷன் வீக் என இரண்டு சுற்றுகள் நடத்தப்பட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இம்யூனிட்டி வீக்கில் வெற்றிபெறும் போட்டியாளர் அதற்கு அடுத்த வாரம் வரவுள்ள எலிமினேஷன் வீக்கில் இருந்து தப்பித்து விடுவார். அதே போல சென்ற வாரம் வெளியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர் மாஸ்டர் இம்யூனிட்டி சுற்றில் ஜெயித்து எலிமினேஷனிலிருந்து தப்பி விட்டார்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

அந்த வகையில் நேற்று வெளியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பவித்ரா எலிமினேட் செய்யப்பட்டார். நேற்று ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சியின் போது அஷ்வின் மற்றும் பவித்ரா எலிமினேஷன் சுற்றுக்கு தள்ளப்பட்டனர். இவர்களில் யார் ஒருவர் வெளியேறினாலும் ரசிகர்களுக்கு வருத்தமளிக்க கூடியதாக இருந்திருக்கும்.

cwc

ஆனால் எதிர்பாராத விதமாக நேற்று பவித்ரா இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியே செல்வதற்கு முன்னால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியினால், தன் வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு பவித்ரா முதன் முதலாக தனது ரசிகர்களுக்கு நன்றி கூறி ட்வீட் செய்துள்ளார். இவரது பதிவு தற்போது வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here