சன் மியூசிக் மூலம் தொகுப்பாளினியாக மக்கள் மத்தியில் அறிமுகமான மணிமேகலை காலில் சுடுதண்ணீர் கொட்டியதோடு ரோட்டில் குத்தாட்டம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது.
மணிமேகலை
சன் மியூசிக் மூலம் பிரபலமானவர் தான் மணிமேகலை. தனது காதல் திருமணத்தால் குடும்பத்தை விட்டே பிரிந்து உள்ளார். இதனால் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. போலீஸ் கேஸ் வரைக்கும் சென்றது. இதனால் பல பிரச்சனைகளை சந்தித்து வந்தார். மேலும் மக்கள் மத்தியிலும் அவருக்கென்று தனி மதிப்பு இருந்தது. அதன் பிறகு தான் அவருக்கு விஜய் டிவியில் வாய்ப்பு கிடைத்தது.
அதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினார். அதன் பிறகு அவர் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்தினார். இதனாலேயே அவருக்கு குக் வித் கோமாளியில் வாய்ப்பு கிடைத்தது. இவரின் சேட்டைகள் தான் அல்டிமேட். சமையலில் ஒன்னு கூட தெரியாமல் ரேகா அம்மாவுடன் இவர் வாங்கிய அடியும் பேச்சும் கொஞ்சம் நஞ்சம் கிடையாது. வனிதாவிடம் சொல்லவே வேண்டாம்.
சும்மாவே அவருக்கு அவ்வளவு கோவம் வரும். இதில் மணிமேகலை செய்யும் செயலுக்கு சொல்லவா வேண்டும். இப்படி இந்த காலத்தில் இருப்பார்களா?? என்று மணிமேகலையை பார்த்து தான் ஆச்சரியப்பட வேண்டும். சில எபிசோடுகளாக மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவே இல்லை. அதற்கு காரணத்தையும் அவர் வெளியிட்டிருந்தார்.
அதாவது அவரது காலில் சூடு தண்ணீர் கொட்டியதால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை. தற்போது ஓரளவிற்கு குணமாகி இருந்தார். இந்நிலையில் ரோடில் தனது கணவருடன் குத்தாட்டம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது. சூடு தண்ணீர் கொட்டிய பிறகு பெரிய கேப் விட்டு இப்பொழுது தான் வெளியே வந்துருகிறார். மேலும் தனது கணவர் தான் இதற்கும் காரணம் என்று நெகிழ்ந்து கூறியுள்ளார்.
இந்த விடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.