விஜய் தொலைக்காட்சியில் பெரும் வரவேற்போடு ஒளிபரப்பப்பட்டு வரும் நிகழ்ச்சி தான், “குக் வித் கோமாளி”. இந்த நிகழ்ச்சியில் முக்கியமாக கருதப்படும் ஒரு கோமாளி இன்னும் சில எபிசோடுகளில் கலந்து கொள்ள போவது இல்லையாம். இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி
விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு முதல் ஒளிபரப்பப்பட்டு வரும் ஒரு சமையல் நிகழ்ச்சி தான், “குக் வித் கோமாளி” இந்த நிகழ்ச்சியில் நன்றாக சமைக்க தெரிந்த ஒருவர் குக்காகவும் ஓரளவிற்கு சமைக்க தெரிந்தவர் கோமாளியாகவும் இருப்பார். இந்த நிகழ்ச்சி இந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வெற்றி அடைந்ததற்கு காரணமே கோமாளிகள் தான் என்று கூட சொல்லலாம். கோமாளிகள் செய்யும் சேட்டைகள் அனைவரும் ரசிக்கும் படியானதாக இருக்கும்.
நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் யுனிவர்சல் பாஸ் – வைரலாகும் ட்விட்டர் பதிவு!!
இப்படி இருக்க இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசனில் இருந்து கோமாளிகளாக புகழ், மணிமேகலை, பாலா, ஷிவாங்கி உள்ளிட்டோர் இருந்து வருகின்றனர். இதில் தொகுப்பாளினியாக இருந்து தற்போது இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக இருக்கும் மணிமேகலைக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அவர் செய்யும் சேட்டைகள் அலாதி. அதே போல் இவர்கள் அனைவரும் எதார்த்தமான நகைச்சுவையினை யார் மனதும் புண்படாதபடி செய்வர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இப்படியாக இருக்க மணிமேகலை கடந்த சில நாட்களுக்கு முன்பாக சுடுதண்ணீரை ஊற்றி கொண்டாராம். இதனால் இவருக்கு காலில் அடிபட்டுள்ளது. இதனை அடுத்து இவர் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் இன்னும் சில எபிசோடுகளில் பங்கேற்க இயலாதாம். இந்த செய்தி “குக் வித் கோமாளி” ரசிகர்களை சோகம் அடைய வைத்துள்ளது. ஏற்கனவே இவர் சில எபிசோட்கள் கலந்து கொள்ள இல்லை என்பது போல் தெரிவித்து இருந்தார், தற்போது அவர் மேலும் சில எபிசோடுகள் வராமல் இருக்க போகிறாரோ என்று அனைவரும் வருத்தம் அடைந்துள்ளார்.