குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அதிக பிரபலமான ஷகிலா அம்மா தற்போது கொரோனாவால் கஷ்டப்படும் மனிதர்களுக்கு உதவி செய்யும் வகையில் அவர்களுக்கு உணவளித்து வருகிறார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஷகிலா
மலையாள நடிகையான ஷகிலா நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு தான் அவருக்கு பெயரே மாறியது. ஷகிலா அம்மா என்று அனைவராலும் அழைக்கபட்டார்.
இந்த நிகழ்ச்சி தான் அவருக்கு இந்த அளவுக்கு பெயரை சம்பாதித்து கொடுத்தது. குக் வித் கோமாளியில் 2வது பரிசையும் தட்டி சென்றார். தற்போதும் அதே போல அவர் வாங்கிய முதல் பரிசும் இது தான் என்று கண்கலங்கினார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஷகிலாவிற்கு இப்படி ஒரு மறுபக்கம் இருக்கிறதா?? என்று அனைவரும் அதிர்ச்சியாக தான் செய்தனர். குக் வித் கோமாளி பவித்ராவை கூட தன் மகளாக தத்தெடுத்து கொண்டார்.
இப்படி இவரின் நல்ல பக்கங்களை பார்த்த நமக்கு மேலும் ஷாக்களிக்கும் விதமாக ஒருகாரியத்தை செய்துள்ளார். அதாவது இந்த கொரோனா சமயத்தில் பசியில் வாடும் ஏழைகளுக்கு உணவளித்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.