விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் செந்தூர பூவே சீரியலில் தற்போது மீண்டும் முக்கிய பிரபலம் ஒருவர் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.
செந்தூர பூவே
விஜய் டிவியில் செந்தூரப்பூவே சீரியல் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. ரோஜா தனது காதலனை இரண்டாவது நாளே இழந்து வயிற்றில் கருவுடன் வீட்டிற்கு வர தன் மாமனின் சூழ்ச்சியால் துரை சிங்கத்திற்கு திருமணம் செய்து வைக்கின்றனர்.
இதனால் பல கஷ்டங்களை அனுபவிக்கிறார் ரோஜா. மேலும் மக்கள் மத்தியிலும் இந்த சீரியலுக்கு நாளுக்கு நாள் ஆர்வம் அதிகரித்து வருகிறது. அதாவது துரையின் முதல் மகள் ரோஜா மீது வெறுப்பையே காட்டி வருகிறார்.
இதனால் இந்த சீரியலில் துரையுடன் ரோஜா எப்படி இணைய போகிறார் என்பதும், மேலும் குழந்தைகள் மனதில் ரோஜா எப்படி இடம் பிடிக்க போகிறார் என்பதே பெரிய ட்விஸ்ட்டாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ரோஜாவின் முன்னாள் கணவர் அன்பின் அம்மாவாக நடிப்பவர் தான் குக் வித் கோமாளி பிரபலம் தீபா.
இவர் சில நாட்களாக இந்த சீரியலில் தலைகாட்டாமல் இருந்தார். இந்நிலையில் மீண்டும் இந்த சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். அப்படி என்றால் சீரியலில் புதிய ட்விஸ்ட் எதோ உள்ளது என்பது மட்டும் தெரிகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்