குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர் அஷ்வின் தனது அம்மாவுடன் எடுத்துள்ள புகைப்படம் ஒன்றை வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவு ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
நடிகர் அஷ்வின் குமார்
கடந்த 7 வருடங்களாக சினிமாவில் சாதிக்க துடிக்கும் அஷ்வினை அடையாளம் கண்டு கொண்டது விஜய் தொலைக்காட்சி. திரைப்பிரபலங்கள் பலர் கூறுவது போல ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் விஜய் டிவி ஒரு முக்கிய பங்காற்றியுள்ளது. அதனால் தான் என்னவோ விஜய் தொலைகாட்சிக்கென்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அந்த வகையில் சிறந்த நடிகர், நல்ல மனிதர் ஒருவரை ரசிகர்களுக்கு அடையாளம் காட்டியுள்ளது விஜய் தொலைக்காட்சியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வரும் நடிகர் அஷ்வின் குமார் சில குறும்படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் சில ஆண்டுகளுக்கு முன்னாக ஒளிபரப்பு செய்யப்பட்ட ‘ரெட்டைவால் குருவி’ என்ற தொடரிலும் நடித்துள்ளார் அஷ்வின்.
இன்னும் தூங்கவில்லையா?? சீக்கிரம் போய் தூங்குங்க!! இன்று உலக தூக்கத்திற்கான தினம்!!
அப்போதெல்லாம் கிடைக்காத பெயரும், புகழும், ரசிகர்களும் தற்போது இவர் கலந்து கொண்டு வரும் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி இவருக்கு பெற்றுத்தந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் அஷ்வின் தன்னுடைய வாழ்க்கையில் தான் கடந்து வந்த பாதைகளை குறித்து பேசியிருந்தார்.
சில நாட்களுக்கு முன்னதாக கடை திறப்பு விழாவுக்கு சென்றிருந்த அஷ்வினை காண்பதற்கு அங்கு ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய இடத்தை பெற்றிருக்கும் அஷ்வின், அவரது அம்மாவுடன் எடுத்துள்ள புகைப்படம் ஒன்று வலைதளத்தில் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டோட மாமியார் என்றும் பலர் கமன்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.