உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அனுதினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வந்து செல்கின்றனர். இதனால் இவர்களின் பயணங்களை எளிய முறையில் மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை தேவஸ்தானம் மேற்கொண்டு வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் காற்று மாசுபாட்டால் திருப்பதி மலையின் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பெட்ரோல், டீசலில் இயங்கும் பேருந்துகளை எலக்ட்ரிக் பேருந்துகளாக மாற்ற ஆந்திர மாநில போக்குவரத்து துறை முடிவு செய்தது. எனவே தேவஸ்தான பயன்பாட்டிற்காக மின்சாரத்தில் இயங்கக் கூடிய கார்கள் இயக்கப்பட்டது.
மார்ச் 7ல் இந்த பள்ளிகளுக்கு விடுமுறை.., பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு!!
இதையடுத்து திருப்பதி திருமலைக்கு பக்தர்களின் பயணத்திற்காக 24 மணி நேரம் இயக்கப்படும் இலவச பேருந்துகளை ஒலக்ட்ரா எனப்படும் மின்சார பேருந்துகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனை தயார் செய்த மெகா இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் நிறுவனம் 10 மின்சார பேருந்துகளை நன்கொடையாகவும் வழங்கியது வரவேற்கத்தக்கது.