காங்கிரஸ் முக்கிய பெரும் தலைவரான சோனியா காந்தி, உடல்நல குறைவு காரணமாக டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி:
காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான சோனியா காந்தி, சமீப காலமாக கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து வெளியேறி தீவிர ஓய்வில் இருந்து வருகிறார். இந்த நிலையில் ராகுல் காந்தி, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒற்றுமை ரத யாத்திரை நடத்திய போது, அதன் ஒரு சில நிகழ்வுகள் மட்டும் பங்கேற்று வந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த நிலையில், சதீஷ் கரில் சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பாரத ஒற்றுமை யாத்திரை மாநாட்டில் பங்கேற்ற அவர், 2024 ல் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரசை வெற்றியடைய செய்ய தொண்டர்கள் உழைக்க வேண்டும் என குறிப்பிட்டார். அது மட்டுமல்லாமல் பாரத ஒற்றுமை யாத்திரையுடன் தனது அரசியல் பயணம் நிறைவு பெற்றுள்ளதாக பேசினார்.
இந்தியாவின் சுற்றுலாத் துறையை ஃபாரின் ரேஞ்சுக்கு உயர்த்த திட்டம்., பிரதமர் மோடி உறுதி!!
இப்படி பேசிய நிலையில் திடீரென காய்ச்சல் காரணமாக, டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. தீவிர சிகிச்சைக்கு பின், சோனியா உடல் நலம் தேடி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.