பாஜக நிர்வாகிகள் தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் MLA ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராகுல் காந்தி
கடந்த 2019 ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டார். அந்த கூட்டத்தில் ராகுல் காந்தி “அதெப்படி எல்லா திருடர்களும் தங்களது பெயருக்கு பின்னால் ’மோடி’ என்ற பெயரை வைத்துக் கொள்கின்றனர்?’ என குறிப்பிட்டார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் ஆத்திரமடைந்த பாஜக உறுப்பினர்கள் நீதிமன்றத்தில் 2019 ஆம் ஆண்டு ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தனர். கடந்த 4 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த வழக்கு மார்ச் 17 ஆம் தேதி சூரத் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா முன்பு விசாரணைக்கு வந்தது.
IPL 2023: ‘இம்பாக்ட் பிளேயர் விதி’க்கு நடுவர் இப்படி தான் சிக்னல் விடுவார்…, வெளியான நியூ அப்டேட்!!
இந்நிலையில் இன்று விசாரணை முடிவடைந்த நிலையில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் ஜாமீன் பெற விரும்பினால் ரூ.15,000 பிணைத் தொகை செலுத்தி ராகுல் காந்தி ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இவர் தற்போது காங்கிரஸ் கட்சியின் MLA வாக செயல்பட்டு வருகிறார்.