தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் நாட்டின் பிரதமரான நரேந்திர மோடியை விமர்சித்துள்ளார்.
நரேந்திர மோடி:
தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் பணிகள் மிக தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் துவங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் புதுவை ஆகிய மாநிலங்களில் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்று அனைத்து கட்சிகளும் மிக தீவிரமாக பணி புரிந்து வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் நேற்று தேர்தல் பணிக்காக நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருகை தந்திருந்தார். இங்கு வந்த அவர் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார். தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மோடியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பெண்கள் பாதுகாப்பு குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழி மோடியை கடுமையாக விமர்சித்தனர்.
‘பெண்கள் கண்ணியத்திற்கு குறைவாக நான் பேசவில்லை’ – தேர்தல் ஆணையத்திற்கு ஆ.ராசா விளக்கம்!!
மேலும் திமுகவின் உதயநிதி ஸ்டாலின் மோடி குறித்து கூறியதாவது, சீனியர்களை ஓரம் கட்டி வந்தவர் தான் மோடி என்று விமர்சனம் செய்துள்ளார். மேலும் குஜராத் மாநிலத்தின் முதல்வராக திகழும் பொழுது எத்தனை பேரை ஓரம் கட்டியுள்ளீர்கள் என்று விமர்சனம் செய்துள்ளார். இதேபோல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கூறியதாவது, 24 மணி நேரமும் பொய் கூறுபவர் தான் மோடி. பொய்களை கேட்க வேண்டுமானால் டிவியில் அவரது பேச்சு விடியோவை காணுங்கள் என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.