தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் ஊடக துறை ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதில் தமிழக காங்கிரஸ் தலைவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த மூன்று நாட்களாக கட்சி தொண்டர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது அவருக்கு கொரோனவிற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளதால் இன்று காலை பரிசோதனை செய்துள்ளார்.
செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைப்பு – அண்ணா பல்கலைக்கழகம்!!!
கடந்த மூன்று நாட்களாக சத்திய மூர்த்தி பவன், அண்ணா அறிவாலயம் என்று சில இடங்களை அவர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இதனை அடுத்து ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்றவர்கள் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.