போதும்டா சாமி ஆள விடுங்க., ஹீரோ ஆசையை விட்டு  மீண்டும் காமெடிக்கே திரும்பிய நடிகர் சந்தானம்!!

0
போதும்டா சாமி ஆள விடுங்க., ஹீரோ ஆசையை விட்டு  மீண்டும் காமெடிக்கே திரும்பிய நடிகர் சந்தானம்!!

காமெடி நடிகர் சந்தானம், சங்கரின் உதவி இயக்குனரான கோவர்தன் இயக்கத்தில் முழுக்க முழுக்க காமெடி கலந்த ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

சந்தானம் புதிய படம்:

கோலிவுட்டில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்தவர் சந்தானம். இவர், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில்  கதாநாயகனாக நடித்து தனது இமேஜை மாற்றினார். தொடர்ந்து தில்லுக்கு துட்டு, பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்தார். இனி தனக்கு, ஹீரோ இமேஜ் மட்டுமே சரியாக இருக்கும் என முடிவு செய்து காமெடி பாத்திரங்களில் நடிப்பதை தவிர்த்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில் தன் முடிவில் இருந்து திடீரென ஜகவாகி முழு நீள காமெடி படத்தில் நடிக்க உள்ளார். இயக்குனர் ஷங்கரின், உதவி இயக்குனரான கோவர்தன் இயக்கும் புதிய படத்தில் காமெடியாக நடிக்க  உள்ளார்.

தனது கெட்டப்புகளை  மாற்றி மாற்றி இவர் இந்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த அப்டேட்டை, கேள்விப்பட்ட நெட்டிசன்கள் ஹீரோ ஆசையை விட்டு மீண்டும் காமெடி பாத்திரத்திற்கு திரும்பினார் சந்தானம் என கமெண்ட்களை  பறக்க விட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here