நகைச்சுவை நடிகர் நாகேஷ், போட்ட அதிரடி பஞ்ச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் மொத்த பேரும் திணறிய போது, கமல் அட்டகாசமான பதில் கொடுத்து அசத்தியுள்ளார்.
கமல் அதிரடி:
உலகநாயகன் என்று அடைமொழியோடு போற்றப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளிவந்த அபூர்வ சகோதரர்கள் திரைப்படம், மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தின் ஷூட்டிங் குறித்து, பேட்டி ஒன்றில் பேசிய கமல் பல சுவாரஸ்ய உண்மைகளை தெரிவித்தார். அதாவது இந்த படத்திற்கு வசனம் எழுத நான் உட்பட கிரேஸி மோகன் போன்ற பலரும் எவ்வளவோ கஷ்டப்பட்டோம்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
ஆனால், இந்த படத்தில் இருந்த நகைச்சுவை நடிகர் நாகேஷ், ஒரே பஞ்ச்சில் எங்கள் எல்லோரையும் தெறிக்க விட்டார். அதாவது, குட்டையாக இருக்கும் கமலை சிலர் நாகேஷிடம் தூக்கி வருவார்கள். அப்போது, என்னடா பாதி தான் வந்திருக்கு, மீதி எங்கடா? என on the spot ல் ஒரு பஞ்ச் போட்டு அசத்தினார்.
இதற்கு என்ன பதில் போடுவது என பலரும் யோசித்துக் கொண்டிருந்தபோது, நான் உடனே இவ்வளவு தான்யா கிடைச்சது, என பதில் சொல்லுமாறு ஒரு வசனம் எழுதினேன். உண்மையிலேயே, நாகேஷ் திறமைக்கு யாராலும் ஈடு கொடுக்க முடியாது. அதை கண்கூடாக நான் அபூர்வ சகோதரர்கள் படத்தின் ஷூட்டிங்கில் தான் பார்த்தேன் எனக் கமல் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.