கலர்ஸ் தமிழில் நுழைந்துள்ள மிர்ச்சி செந்தில் – அதுவும் எந்த ஷோல தெரியுமா?

0

கலர்ஸ் தமிழில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள ஜகமே தந்திரம் கதைகள் என்ற நிகழ்ச்சியை விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் ஹீரோ மிர்ச்சி செந்தில் தொகுப்பாளராக பங்கு பெற உள்ளார். இந்நிகழ்ச்சி டிச 27 திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது என தகவல் வந்துள்ளது.

மது அருந்தும் நபர்களின் வயது 25 லிருந்து 21 ஆக குறைப்பு – மது பிரியர்களை மகிழ்வித்த மாநில அரசு!!

ஜகமே தந்திரம் கதைகள்:

மிர்ச்சி செந்தில் என்று அனைவராலும் அறியப்படும் செந்தில் குமார், தமிழ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார். மேலும் இவர் ரேடியோ மிர்ச்சி என்னும் பிரபல வானொலி நிறுவனத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பணியைத் தொடங்கினார். இதன் மூலமாகவே அவருக்கு மிர்ச்சி செந்தில் என்ற பெயரும் வந்தது. இவர் விஜய் டிவியில் மதுரை, சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை ஆகிய சீரியல்களிலும், தவமாய் தவமிருந்து, பப்பாளி, வெண்ணிலா வீடு,வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், அண்ணனுக்கு ஜே போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கலர்ஸ் தமிழில் நுழைந்துள்ள மிர்ச்சி செந்தில் - அதுவும் எந்த ஷோல தெரியுமா?
கலர்ஸ் தமிழில் நுழைந்துள்ள மிர்ச்சி செந்தில் – அதுவும் எந்த ஷோல தெரியுமா?

மேலும் தற்போது விஜய் டிவியில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில், கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பாக உள்ள மக்களின் மனசாட்சியின் குரலை ஒலிக்கும் ஜகமே தந்திரம் கதைகள் என்ற நிகழ்ச்சி வரவுள்ளது. இந்த நிகழ்ச்சியை மிர்ச்சி செந்தில் தொகுத்து வழங்க உள்ளார். செந்தில் இந்நிகழ்ச்சியை எப்படி தொகுத்து வழங்குவார் என்பதை பார்க்க அவரின் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here