இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள், பெண்கள் என பலரும் விதவிதமான டாட்டூஸ்-களை உடலில் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் பெரம்பலூரை சேர்ந்த கல்லூரி மாணவர் பரத் (வயது 22) என்பவர், கடந்த மாதம் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்ற போது கழுத்தில் நங்கூரம் டாட்டூவை போட்டுள்ளார். பின்னர் வீடு திரும்பிய கொஞ்ச நாட்களிலே டாட்டூ போட்ட இடத்தில் கட்டி ஏற்பட்டு வலி அதிகரிக்க தொடங்கி உள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதையடுத்து மாணவரின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை செய்து வந்தனர். மருத்துவர்கள் அந்த கட்டியை நீக்கி இருந்தாலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. டாட்டூக்களில் பயன்படுத்தப்படும் ரசாயன மைகள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். எனவே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த சம்பவம் பலர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிரிஷ் எல்லா உண்மையையும் சொல்லிட்டான்.., ரோகிணியை மிரட்டும் முத்து.., சிறகடிக்க ஆசை அப்டேட்!!!