அருந்ததீ படத்தில் இடம்பெறும் காட்சிகள் நிஜம் என்று நம்பி, மறுபிறவி எடுப்பதாக நினைத்து தீக்குளித்த மாணவன் உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீக்குளித்த மாணவன்:
சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை அனுஷ்கா. இவர் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் ஆகியோர்களுடன் நடித்துள்ளார். இவர் நடித்து கடந்த 2009ம் ஆண்டு வெளியான அருந்ததீ படத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். மேலும் இந்த திரைப்படம் பல மொழிகளில் வெளியாகி பெரிய வசூல் சாதனை படைத்தது.
இந்த படத்தில் அனுஷ்கா தலையில் தேங்காய்களால் அடித்து கொல்லப்பட்ட பின்னர் மறுபிறவி எடுத்து வருவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இதனை தொடர்ந்து தானும் முக்தி பெற வேண்டும் என்று ஒரு மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டான். அதாவது, கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டம் மதுகிரி தாலுகா கொண்டவாடி கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகா பிரசாத். இவர் தனியார் கல்லூரியில் பி.யு.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்நிலையில் அருந்ததீ படத்தின் மீது உள்ள நாட்டத்தால் தொடர்ந்து 100 தடவை மேல் அப்படத்தை பார்த்துள்ளார். நடிகை அனுஷ்காவின் தீவிர ரசிகனாகவும் மாறியுள்ளார். மேலும் அப்படத்தில் வருவது போன்று தானும் முக்தி பெற வேண்டும் என்று முட்டாள்தனமாக நம்பி மறுபிறவி எடுக்கலாம் என நினைத்து தீக்குளித்து உயிர் இழந்து உள்ளார். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.