செப்டம்பர் 1 முதல் வாரத்தில் 6 நாட்களும் கல்லூரிகள் செயல்படும் – உயர்க்கல்வித்துறை புதிய வழிகாட்டுதகள் வெளியீடு!!

0

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்திருக்கும் நிலையில் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்நிலையில் தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பதற்கான வழிமுறைகளை உயர்க்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தை உலுக்கி வரும் கொரோனாவால் பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்பட்டன. ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தற்போது தொற்று பாதிப்பு குறைந்து உள்ளதால் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் அரசின் அறிவுதலின்படி திறக்கப்படவுள்ளன.

இந்நிலையில் கல்லூரிகள் திறக்கப்பட்ட பின் பின்பற்ற வேண்டிய கீழ்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வி துறை தற்போது வெளியிட்டுள்ளது.

  • செப்டம்பர் 1 முதல் தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளும் வாரத்தில் 6 நாட்களே இயங்கும்
  • அனைத்து மாணவர்களுக்கும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும்
  • கலை அறிவியல், பொறியியல் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளியில் வகுப்புகள் நடைபெறும்
  • பொறியியல் இறுதியாண்டு, முதுகலை மாணவர்களுக்கு 6 நாட்களுக்கு வகுப்பு நடைபெறும்
  • மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் வகுப்பு நடைபெறும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here