தமிழகத்தில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் கல்லூரிக்கல்வி இயக்ககம் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு மாநிலத்தின் பல மாவட்டங்களில் தொற்று குறைந்து வரும் வேளையில் மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு முன்பு செப்டம்பர் 1 முதல் பள்ளிகளில் 9,10,11 மற்றும் 12-ம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கல்லூரிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்:
- கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளே தொடரும்
- மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம்
- மாற்றுத் திறனாளி மாணவர்கள் கல்லூரிகளுக்கு வருகை தர அவசியமில்லை
- தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு அந்தந்த கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்
- நோய்த்தொற்று உள்ள மாணவர்களைக் கண்டறிததால், அவருடன் தொடர்புடைய அனைவருக்கும் RT-PCR சோதனை எடுக்கவேண்டும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்