கேரளாவில் உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை முடிந்து மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி முதல் நடை திறக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜை காலங்களில் இருந்து நாளுக்கு நாள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் கொரோனா தடை நீங்கியதால் சன்னிதானத்தில் தங்குவது, பெருவழிப்பாதை என பல்வேறு ஏற்பாடுகளை கேரள அரசு பக்தர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இப்படி இருக்கையில் எப்போதும் மண்டல மகர பூஜைகளின் போது பம்பை ஆற்றில் கோலிபார்ம் பாக்டீரியா அளவை அதிகாரிகள் பரிசோதித்து வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பரிசோதித்ததில் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள், முன்னோருக்கு தர்ப்பணம் மற்றும் கழற்றிவிடும் ஆடைகளை பம்பை ஆற்றில் விடுவதால் பாக்டீரியா அளவு மிக அதிகமாகியுள்ளது.
குடியிருக்கும் வீட்டை விற்கும் நிலைக்குப் போன தனுஷ் பட நடிகை., அப்படி என்ன கஷ்டம் உங்களுக்கு?
அதாவது பாக்டீரியா அளவு 500 க்கு மேல் இருந்தால் டைபாய்டு, மலேரியா போன்ற நோய் ஏற்படும். ஆனால் தற்போது 6000 க்கும் மேல் கடந்துள்ளதால் பாக்டீரியாவை கட்டுப்படுத்த குள்ளார் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் இனி வரும் பக்தர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.