நாம் தமிழர் கட்சியினர் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில் உடனடியாக நடவடிக்கை எடுத்து விலையினை குறைக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அப்துல் வகாப் தலைமையில் போராட்டம் நடந்தது.
கோவையில் நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்..
பெட்ரோல்,டீசல் விலை நம் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இன்றைய ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.100 தேடியது, ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.95யை தாண்டியது. இந்த தொடர் விலை அதிகரிப்பால் மக்கள் அனைவரும் மிகவும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். ஆட்டோ, டாக்ஸி போன்ற வாகன ஓட்டிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றர்ன். மக்களின் வழிகளை புரிந்துகொள்ளாத மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனகளுக்கு சாதகமாக இந்தமாரி விலை உயர்வுகளை ஏற்றி வருகிறது. இந்த விலை உயர்வினை கண்டது பல இடத்தில பல காட்சிகள் சார்பாக போராட்டங்கள் மாறியல்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் கோவையில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் அப்துல் வகாப் தலைமையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டான் ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்த ஆர்ப்பாட்டத்தில் உடனடியாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் மற்றும் கலால் வரியை ரத்து செய்ய வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பி மக்களின் சார்பாக எதிர்ப்பை தெரிவித்தனர். இதற்கான நடவடிக்கையை உடனடியாக மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றனர். எதிர்க்கட்சியான அதிமுக இதைப்பற்றி எந்த ஒரு ஆர்ப்பாட்டம் எதுவும் பண்ணது இல்லை கரணம் பாஜகவுடன் கூட்டணி இருப்பதால் மற்றும் பாஜகவின் கைக்கூலியாக அதிமுக இருந்து வருகிறது, அதுமட்டுமில்லாமல் தமிழ் மக்களுக்காக எப்பொழுதும் களத்தில் இரங்கி குரல் கொடுக்கும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சிதான் என்று அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அப்துல் வகாப் செய்தியாளர்களிடம் கூறினார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்