தமிழகத்தில் இனி இந்த மாவட்டத்தில் வார இறுதி நாளில் முழு ஊரடங்கு – மாநகராட்சி அதிரடி நடவடிக்கை!!

0

தமிழக அரசு, கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அளித்தது. அதை தொடர்ந்து இன்று திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவை மாவட்டத்தில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

எனவே கொரோனா தொற்று குறையாத காரணத்தினால், தமிழ்நாடு அரசு அளித்துள்ள ஊரடங்கு தளர்வுகளில் கோவை மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

அதன்படி கோவை மாவட்டத்தில் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, கிராஸ்கட் சாலை, ரைஸ் மில் சாலை, என்.பி. இட்டேரி சாலை, எல்லைத் தோட்ட சந்திப்பு, ஒப்பணக்கார வீதி, நூறடி சாலை, காந்திபுரம், துடியலூர் சந்திப்பு ஆகிய பகுதிகளில் உள்ள அத்தியாவசிய கடைகள் இன்றி மற்ற கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதேபோல அம்மாவட்டத்தில் அனைத்து மால்களும் ஞாயிற்றுக்கிழமை இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து அருங்காட்சியகங்கள், சுற்றுலா தளங்கள்,  பூங்காக்களில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here