கொரோனா பரவலை கட்டுப்படுத்த மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை !!!

0

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை !!!

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களுடன் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனை நடைபெறுகிறது.

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல துரித நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. மார்ச் மாத இறுதியில் இருந்து கொரோனா தொற்று 2ம் பரவல் அதிவேகமாக பரவுகிறது. இந்த நிலையில் பரவலை கட்டுப்படுத்த மே 11 முதல் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்த முழு ஊரடங்கை முறையாக கையாண்டால் தொற்று பரவல் குறைய வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற குறிப்பிட்ட மாவட்டங்களில் தொற்று பரவல் வேகம் குறைந்தபாடில்லை. எனவே மு க ஸ்டாலின் தலைமையில் இன்று மே 13 மாலை 5 மணிக்கு `அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம்” நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here