Thursday, April 25, 2024

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக கொரோனா பரிசோதனை & முதலீடுகள் – முதல்வர் உரை !!

Must Read

இந்தியாவில் கொரோனா பரிசளித்தானை மையங்கள் அதிக அளவில் தமிழகத்தில் தான் உள்ளது என்று நடந்து கொண்டு இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்து உள்ளார்.

ஊரடங்கு நீடிப்பா??

தளர்வகளுடன் கூடிய பொது முடக்கம் வரும் 31ஆம் தேதி முடிவடைகிறது. இங்தக நிலை பொது முடக்கம் நீடிக்க படுமா? என்ற கேள்விகள் தொடர்ச்சியாக கேட்டகப்பட்டு வந்தன. அதற்காக இன்று முதல்வர் பழனிசாமி தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

meet with collectors
meet with collectors

இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா குறித்து பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றது. தற்போது, முதல்வர், தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசு ஊழியர்கள் அனைவரும் வீடுவீடாக சென்று கொரோனா பரிசோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா நடவடிக்கைகள்:

கொரோனா தொற்று பாதித்தவர்களில் கிட்டத்தட்ட 73 % பேர் நலமாக வீடு திரும்பி உள்ளனர். கொரோனா பரவல் அதிகமாக இருந்த தலைநகர் சென்னையில் 80 சதவீதம் பேர் நலமாக வீடு திரும்பி உள்ளனர். இதுவரை தமிழகத்தில் மட்டும் 20 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில முதல்வர் அறிவிப்பு!!

corona activities in TN
corona activities in TN

தேவையான மருந்துகள் அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. கபசுப குடிநீர், முகக்கவசங்கள் என்று கொரோனாவை எதிர்கொள்ளும் அனைத்து நடவடிக்கையையும் தமிழக அரசு சரியாக செய்து வருகிறது. புதிதாக 3,962 ஐசியு படுக்கைகள், 2,882 வெண்டிலேட்டர்கள் என்று எல்லாமும் அமைக்கப்பட்டு உள்ளது.

முதல்வர் உரை:

மேலும் முதல்வர் கூறியதாவது”இந்தியாவிலேயே அதிகமான பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் தான் உள்ளது. பல முதலீடுகளை ஈர்த்த மாநிலமாக தமிழகம் தான் உள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பத்திரமாக அனுப்பப்பட்டு உள்ளனர். வந்தே பாரத், சமுத்திர சேது திட்டங்கள் மூலமாக வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் 51,000 பேர் பத்திரமாக வந்தடைந்து உள்ளனர். ” என்று தனது உரையில் தெரிவித்து உள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

IPL வரலாற்றில் மோகித் ஷர்மா மோசமான சாதனை.. வெளியான முக்கிய அப்டேட்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 40 வது லீக் போட்டியில் குஜராத்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -