தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தடுப்பணை கட்டும் பணிகள், ஏரிகளுக்கு மறுசீரமைப்பு பணிகள் போன்றவற்றிற்கு அடிக்கல் நாட்டினர்.
தடுப்பணை:
திருவள்ளூா் தத்தமஞ்ஜி இரட்டை ஏரிகளை இணைத்து நீா்த்தேக்கத்தை உருவாக்கும் திட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் கிராமத்தில் உள்ளாவூா் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை, கடலூா் கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூா் மாவட்டங்களில் மலட்டாற்றினை புனரமைத்து மேம்படுத்தும் பணி, நாகை மாவட்டம் உப்பனாற்றின் குறுக்கே கடைமடை நீரொழுங்கி கட்டும் பணி ஆகியவற்றுக்கு முதல்வா் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
புனரமைப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணி:
நெல்லை மாவட்டம் நம்பியாற்றின் குறுக்கே தடுப்பணை, ஈரோடு அரக்கன்கோட்டை கால்வாய் சீரமைப்பு, திண்டுக்கல் மாவட்டம் காட்டுப் பெரியகுளம் அணைக்கட்டு, நங்காஞ்சியாற்றின் குறுக்கே தடுப்பணை, புதுக்கோட்டை பேராம்பூா்வாரியின் குறுக்கே அணைக்கட்டு,
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
திருவாரூா் திருக்கண்ணமங்கை வாய்க்கால் புனரமைப்பு, விருதுநகா் அா்ஜூனா நதியின் குறுக்கே தடுப்பணை, கோவை மாவட்டம் பரம்பிக்குளம் பிரதானக் கால்வாயில் மறுசீரமைப்புப் பணி ஆகியவற்றையும் முதல்வா் பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.
தடுப்பு சுவா் அமைக்கும் பணி:
இதேபோன்று, சிவகங்கை மாவட்டம் உப்பாற்றின் குறுக்கேயுள்ள கட்டுமானத்தை புனரமைக்கும் பணி, ராமநாதபுரம் மாவட்டம் சீனியப்பா தா்கா அருகே மன்னார் வளைகுடா கடலோரப் பகுதியில் தடுப்பு சுவா் அமைக்கும் பணி.
விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கிரேன் விபத்து – 10 தொழிலாளர்கள் பலி!!
திருவாடானை முள்ளிமுனை கிராமம் அருகே மன்னார் வளைகுடா கடலோரப் பகுதியில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி, தேனி மாவட்டம் புது அணைக்கட்டு வாய்க்கால் நவீனப்படுத்தும் பணி, போடிநாயக்கனூா் ராஜவாய்க்கால் அணைக்கட்டில் வெள்ளத் தடுப்புச் சுவா் கட்டும் பணி ஆகியவற்றுக்கும் முதல்வா் அடிக்கல் நாட்டி கட்டுமானப் பணிகளை தொடக்கி வைத்தார்.