2020 ஆம் ஆண்டு நடைபெற இருந்த டோக்கியோ ஒலிம்பிக் தொடர் கொரோனா தொற்றின் எதிரொலியால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டிகள் மீண்டும் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளது. இந்நிலையில் வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வீரர்களுக்கு கோடியில் பரிசுகளை அறிவித்து அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகள் உலகின் முதன்மையான விளையாட்டு போட்டியாக கருதப்படுகிறது. இந்த போட்டிகளில் 200 மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன. இதில் பல வித போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த இந்த போட்டிகள் கொரோனாவால் தள்ளிவைக்கப்பட்டு, தற்போது இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து நாடுகளின் வீரர்களும் தங்களை தயார் படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக அரசு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது. அதாவது, ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் தமிழ்நாடு வீரர்களுக்கு ரூ.3 கோடியும், வெள்ளிப் பதக்கம் வெல்வோருக்கு ரூ.2 கோடியும் மற்றும் வெண்கலப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ரூ.1 கோடியும் பரிசு தொகையாக வழங்கப்படும் என அறிவித்து தமிழக வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்து உள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்