தமிழகத்தில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!!

0

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பொழிய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அடுத்த 48 மணிநேரத்தில் மணி நேரத்தில் கடேலார மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம், கேரளா இடையே 7 சிறப்பு ரயில்கள் இயங்கும் – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!!

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருப்பத்தூர், கடலூர் பகுதிகளில் தலா 13 செமீ மழையும், பெரம்பலூர், திருவண்ணாமலை பகுதிகளில் குறைந்தபட்சமாக 6 செமீ மழைப்பொழிவும் பதிவாகி உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 48 மணிநேரத்தில் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் ஒரிசா கடேலாரப் பகுதிளில் உருவாகக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

மத்திய வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று தென்மேற்கு திசையில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் இப்பகுதிக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here