சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையின் படி, தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வடமேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சி (நீலகிரி) 18, மல் பவானி (நீலகிரி) 12, வால்பாறை (கோவை), தேவலா (நீலகிரி) 11 செமீ மழைப்பொழிவும், குறைந்தபட்சமாக கொட்டாரம் (கன்னியாகுமரி), வேலாகம் (கன்னியாகுமரி) தலா 4, பாபநாசம் (திருநெல்வேலி) 3 செமீ மழையும் பதிவாகி உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
அடுத்த 24 மணிநேரத்தில் மன்னார் வளைகுடா, லட்சத்தீவு, கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகள், வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் பகுதிகள், தென்கிழக்கு & தென்மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் 45-55 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும் எனபதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.