பள்ளிகள், தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பல ஆன்லைன் திருப்புதல் தேர்வை அடுத்தடுத்து நடத்திய வண்ணம் உள்ளன. கொரோனா தொற்றால் ஒரு வேலை அரசு, பொதுத்தேர்வை ரத்து செய்தால் இந்த திருப்புதல் தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று மாணவர்கள் கருதுவதால் சில பள்ளிகளில் 100% வருகை பதிவாகியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சென்னை மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பொதுவான வினாத்தாள்களுடன் நடத்தப்படும் இத்தேர்வுகள் பிற்பகலில் மூன்று மணி நேரம் நடத்தப்படுகின்றன. பாடத்திட்டங்கள் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றன. பின்னர் பள்ளிகள் வினாத்தாளை ஆன்லைன் தளங்கள் மூலம் மாணவர்களிடையே பகிர்ந்து கொள்கிறது.
செட்பேட்டிலுள்ள எம்.சி.சி மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் ஜி ஜே மனோகர் கூறும்போது, “ஒவ்வொரு பள்ளியும் திருப்புதல் தேர்வை நடத்துவதற்கும், தேர்வைக் கண்காணிப்பதற்கும் வெவ்வேறு முறைகளைப் பின்பற்றுகின்றனர். எடுத்துக்காட்டாக, எங்கள் பள்ளியில், நாங்கள் ஜூம் லிங்குகளை மாணவர்களுக்கு அனுப்புவோம், ஒரு நேரத்தில், 400 மாணவர்கள் வரை தேர்வு எழுத்துவார்கள். அவர்கள் பின்னர் தங்கள் விடைத்தாள்களை வாட்ஸ்அப் குழுக்களில் பதிவேற்றம் செய்கின்றனர். பல மாணவர்கள் தேர்வுகளை தீவிரமாக எழுதி வருகின்றனர்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பள்ளிகள் மூடப்படுவதற்கு முன்பு மாணவர்கள் ஆப்லைன் முறையில் இரண்டு திருப்புதல் தேர்வுகளை எழுதினர். பின்னர் ஊரடங்கின் போது மே 12 ஆம் தேதி தொடங்கிய மூன்றாவது சுற்று திருப்புதல் தேர்வுகள் நேற்று முடிவடைந்தன. நான்காவது சுற்று திருப்புதல் தேர்வுகள் மே 24 முதல் ஜூன் 1 வரை நடத்த பள்ளிகள் திட்டமிட்டுள்ளது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!