தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வரும் நிலையில் தற்போது பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ஒத்திவைக்க பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு:
தமிழகத்தில் கடந்த மாதம் முதல் கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 9 முதல் 11ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் என்று அறிவித்தனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த வாரம் 16ம் தேதி முதல் செய்முறை தேர்வுகள் தொடங்கவுள்ளது. மேலும் வருகிற மே மாதம் 3ம் தேதி முதல் பொதுத்தேர்வும் தொடங்கவுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதனால் பிளஸ் 2 வகுப்பிற்கு பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அல்லது ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்தது வருகின்றனர்.
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு?? முதல்வர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை!!
தற்போது இதனை கருத்தில் கொண்டு பள்ளி கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக மே 3ல் நடக்கவிருக்கும் பொதுத்தேர்வினை ஒத்திவைக்க ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆன்லைன் மூலம் தேர்வினை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இன்று மாலை இதற்கான முடிவை பள்ளிகளைவித்துறை அறிவிக்கவுள்ளது.