தமிழகத்தில் வந்து குடியேறியுள்ள இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க முடியாது அவர்கள் சட்ட விரோதமாக நுழைந்தவர்கள் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது…
இலங்கை அகதிகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வந்து குடியேறியுள்ளனர். இந்நிலையில் நீண்ட மாதங்களாக தமிழகத்தில் அகதிகளாக இருக்கும் எங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கு வேண்டும், நாங்கள் இந்தியார்கள் தான் எங்களது பூர்விகம் இந்தியாதான். எங்களது முன்னோர்கள் புலப்புக்காக தொழிலுக்காகவும் வேலை தேடி இலங்கை சென்றனர். நீண்ட வருடங்ககளாக குடும்பத்தோடு அங்கேயே தங்கி வேலை பார்த்து வசித்து வந்துள்ளனர். இப்பொழுது உள்நாட்டு போர் காரணமாகவும் சில அரசியல்வாதிகளின் சூழ்ச்சியாலும் இந்தியர்கள் மேல் உள்ள கோபத்தினால் எங்களை அதிகள் என்று கூறி இலங்கையை விட்டு துரத்திவிட்டனர்,
அதனால் நங்கள் எங்கள் குடும்பத்தோடு மீண்டும் அகதிகளாக தமிழகம் திரும்பிவிட்டோம். இப்பொழுது தமிழ்நாட்டில் 60,000 அகதிகள் வசித்து வருகின்றோம். இங்கு இலங்கையை விட மிக கொடூரமாக எங்களை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டப்பட்டு முகாமில் வசித்து வரும் இலங்கை அகதிகள் எங்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று அகதிகள் சார்பில் உச்சநீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு 2019 ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் இவர்கள் கூறுவது உண்மை போல் உள்ளது இவர்களுக்கு குடியுரிமை அளிப்பதில் என பிரச்சனை வரும் ஏன் வழங்க மறுக்கிறீர்கள் அவர்களது மனுவை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் அமர்வு முன் ஒன்றிய அரசு மேல் முறையீடு செய்தது. அதில் இலங்கை அகதிகளான இவர்கள் சட்ட விரோதமாக நம் நாட்டிற்குள் நுழைந்துள்ளனர். அதனால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க வாய்ப்பில்லை என்று ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்