சி.ஐ.எஸ்.எப் தேர்வில் முறைகேடு – பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பாதுகாப்பு படைவீரர்..!

0

மத்திய தொழிலக பாதுகாப்புப்படை தேர்விலும் (CISF) முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்புப்படை வீரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 மற்றும் குரூப் 2A ஆகிய தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு தற்போது 36க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு CBCID போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய தொழிலக பாதுகாப்புப்படை தேர்விலும் (CISF) முறைகேடு நடைபெற்றது தெரியவந்து உள்ளது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

2017ம் ஆண்டு நடைபெற்ற சி.ஐ.எஸ்.எஃப் தேர்வில் வெற்றி பெற்று அசாமை சேர்ந்த பிரிகு பாருயா என்பவர் இஸ்ரோவில் பாதுகாப்புப்படை வீரர் ஆக பணியாற்றி வந்தார். பயிற்சியின் போது நடைபெற்ற தேர்வுகளில் இவர் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அவரின் விடைத்தாளை ஆராய்ந்தனர்.

அதில் தற்போதைய அவருடைய விடைத்தாளின் கையெழுத்திற்கும், தேர்ச்சி பெற்ற விடைத்தாள் கையெழுத்திற்கும் வித்தியாசம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது அவர் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி ஆனதை தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். தற்போது இந்த முறைகேடு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here