தமிழ் சினிமாவில் எக்கச்சக்க திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி பிரபலமானவர் தான் வேணு. இவர் குணா, மின்சார கனவு, அன்பே ஆருயிரே உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றுள்ளார். மேலும் தற்போது இவர் ”பனி” என்ற மலையாளத் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் வேணு படப்பிடிப்பு தளத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் இதன் காரணமாக படப்பிடிப்பு தளத்தில் வைத்து இயக்குனருக்கும் வேணுவுக்கும் இடையில் கடுமையான கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்படத்தில் வேணுவை நீக்கிவிட்டு வேறொரு ஒளிப்பதிவாளரை இயக்குனர் கமிட் செய்துள்ளார். இப்படி இருக்கையில் தனக்கு குண்டர்கள் சிலர் கொலை மிரட்டல் விடுவதாக திருச்சூர் காவல் நிலையத்தில் ஒளிப்பதிவாளர் வேணு புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.