கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது திராட்சை ரசம், அப்பம் வழங்கலாம் – தமிழக அரசு அனுமதி!!

0

டிசம்பர் 25 ல் கிறித்துவர்களின் பண்டிகையான கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில், கிறித்துவ தேவாலயங்களில் மிக முக்கிய அம்சமாக திகழும் நற்கருணை மற்றும் புனித நீர் தெளிப்பு போன்ற சடங்குகளுக்கு தமிழக அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை:

நற்கருணை, புனித நீர் தெளிப்பு போன்ற ஒருவரை ஒருவர் தொடக்கூடிய சடங்குகளால் கொரோனா நோய்த்தொற்று பரவக்கூடிய அபாயம் உள்ளதால், அதனை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் இரக்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது. இதனால், தலைமை செயலாளர் சண்முகம், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் & சென்னை மாநகராட்சி ஆணையருக்கும் ஒரு அறிக்கை அளித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த அறிக்கையில், கொரோனா நோய்பரவலை தடுக்கும் வகையில், வழிபாட்டு தலங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை கடந்த ஆகஸ்ட் 31 ம் நாள் பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டது. இதனடிப்படையில், கிறிஸ்துவ வழிப்பாட்டு ஆலையங்களில் உள்ள வழிபாடு முறைகளான நற்கருணை, புனித நீர் தெளிப்பு போன்ற ஒருவரை ஒருவர் தொடுமாறு நிகழும் சடங்குகளை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ரஜினிக்கு வாழ்த்து கூறி நடிகர் ராகவா லாரன்ஸ் ட்வீட்!!

இந்நிலையில், வருகின்ற டிசம்பர் 25 ல் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட உள்ளதால் அவர்களின் வழக்கத்தில் உள்ள நற்கருணை மற்றும் புனிதநீர் தெளிப்பு போன்ற சடங்குகளுக்கு அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்திருந்தது. இந்த மனு மறுபரிசீலனை செய்யப்பட்டு, கிறிஸ்துவ தேவாலயங்களுக்கு சில நிபந்தனைகளுடன் நற்கருணை வழங்க அனுமதிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், நற்கருணை நிகழ்வின் போது கொடுக்கப்படும் அப்பமும், திராட்சை ரசமும் தனித்தனி கப்புகளில் பக்தர்களுக்கு தர வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here