துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், பலர் கட்டிடங்களுக்கு இடையே, இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். இதனால், தற்போது வரை பலி எண்ணிக்கை 4000த்தை தாண்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில், இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதன் மூலம், பலி எண்ணிக்கையானது மேலும், உயர கூடும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையில், துருக்கியின் கால்பந்து கிளப்பாக விளையாடி வரும், கானா நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் அட்சு, நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் தான் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜாம்பவானின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி?? ஆஸி,தொடரில் வாய்ப்பு கிட்டுமா!!!
நிலநடுக்கத்திற்கு பிறகு, இவரை கிளப் அதிகாரிகள் தொடர்பு கொள்ள முயற்சித்த போது முடியவில்லை என தகவல் வெளியானது. இதனால், இவர் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், இவர் கட்டிட இடிபாடுக்குள் இருந்து காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.