சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்தில் அதிரடியாக பல மர்மங்கள் நாளுக்கு நாள் வெளியாகிக்கொண்டு உள்ளது. இந்நிலையில் சித்ராவின் கடைசி நிகழ்ச்சியாக விஜய் டிவியில் ஸ்டார்ட் மியூசிக் வரும் 20 ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகை சித்ரா. மக்கள் டிவியில் ஆரம்பித்த இவரின் திரைப்பயணம் இவ்வளவு சீக்கிரமாக முடிவடையும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டோம். இவர் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு அப்படி என்ன தான் நடந்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இவ்வளவு தைரியமான ஒரு பெண் இப்படி கோழையாக முடிவெடுத்தது எதற்காக என்ற கோணத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில் ஹேமந்த் அவரை சந்தேகித்து வந்ததாகவும் நெருக்கமான சித்ரா நடிப்பது பிடிக்கவில்லை என்றும் ஹேமந்த் வாக்குமூலம் கொடுத்தார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்தகட்டமாக சித்ரா வாங்கிய கடனால் அதனை அடைக்க அயராது உழைத்துள்ளார்.
சைக்காலஜி படித்த சித்ராவின் இந்த தற்கொலை மக்கள் மனதில் பெரும் சோகத்தையே ஏற்படுத்தியுள்ளது. மேலும் குடும்பத்தையும் தனி ஆளாக கவனித்து வந்த சித்ரா திருமணத்தையும் தனி ஆளாக தான் கவனித்துள்ளார். ஹேமந்த் பக்கத்தில் இருந்து எந்த உதவியும் சித்ராவிற்கு கிடைக்கவும் இல்லை. சித்ரா தற்கொலை செய்துகொண்டதற்கு முனபாக கூட ஹேமந்த் ‘செத்து தொலை’ என்று கூறியுள்ளார்.
கர்ப்பமாக இருக்கும் உண்மையை வீட்டில் சொல்லாமல் மறைக்கும் தனம், சத்தியமூர்த்தி!!
இதனால் மனமுடைந்து சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனால் ஹேமந்த்தை கைதும் செய்தனர். மேலும் விஜய் டிவியில் சித்ரா கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சியும் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியிடவுள்ளது. சித்ரா இதில் வழக்கம் போல ஆடிப்பாடி மகிழ்ச்சியாக தான் காணப்படுகிறார்.
எப்பொழுதும் போல அந்த சிரித்த முகத்துடன் பல கலாட்டாக்களுடன் தான் இருக்கிறார். இதனை பார்த்த பலருக்கும் கண்கலங்கியது என்றே சொலலலாம். இந்த நிகச்சிக்காக மக்கள் பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.
Super
???????????