சித்ரா மரணத்திற்கு ஹேமந்தும், அவரது தாயாருமே காரணம் – காவல்துறை விசாரணையில் தகவல்!!

0

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இது தற்கொலையா?? கொலையா?? என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் எழுந்ததை அடுத்து அவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் தற்கொலை தான் செய்துகொண்டார் என வந்தது. இந்நிலையில் இந்த தற்கொலைக்கு ஹேமந்த்தும், சித்ராவின் தாயாரும் முழு காரணம் என தெரிய வந்துள்ளது.

சித்ரா தற்கொலை:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சித்ரா தற்கொலை செய்துகொண்டது அனைவரையும் வெகுவாக பாதித்துள்ளது என்றே சொல்லலாம். அவர் தற்கொலை தான் செய்து கொண்டாரா?? அல்லது கொலையா?? என பலரும் கேள்வி எழுப்பினர். ஏனெனில் சித்ரா கன்னத்தில் காயம் இருந்ததால் இது கொலையாக இருக்குமோ? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் இது தற்கொலை தான். அந்த கீறல் சித்ராவின் நகக்கீறல் தான் என முடிவு வந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

chithra

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதவுள்ள கிரிக்கெட் தொடர் அட்டவணை!!

இதனை தொடர்ந்து போலீசார் அவரது தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு மனஅழுத்தத்தை யார் தந்தது என்ற ரீதியில் விசாரணையை ஆரம்பித்தனர். தற்போது அதற்கு ஹேமந்தும் அவரது அம்மாவும் தான் காரணம் என தெரியவந்துள்ளது. சின்னத்திரை நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு ஹேமந்த் குடித்து விட்டு சென்று பிரச்சனை செய்துள்ளார். மேலும் சித்ராவின் தாயாரான விஜயா ஹேமந்தை விட்டு பிரியுமாறு கண்டபடி பேசியுள்ளார். இதுவே சித்ராவின் மனஅழுத்தத்திற்கு காரணமாக இருந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here