ஹோட்டலில் இதெல்லாம் இல்லாம எப்படி தூக்கில் தொங்குவார்?? தொடரும் சித்ராவின் தற்கொலை மர்மம்!!

0

பிரபல சீரியல் நடிகையான சித்ராவின் இறப்பில் தொடர்ந்து பல மர்மங்கள் கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவரது தற்கொலை தொடர்பாக தீவிர விசாரணையும் போலீசார் நடத்தி வருகின்றனர். சித்ரா தங்கியிருந்த ஹோட்டலில் தூக்கு போடும் அளவிற்கு எந்த வசதியுமே கிடையாதாம். ஒரு ஃபேன் கூட கிடையாது என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சித்ரா

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சித்ரா. இவரின் இந்த அகால மரணம் பலரையும் பாதித்துள்ளது. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பார்ப்பதே முல்லைக்காக தானே’ இப்பொழுது அவர் இல்லாத சீரியலை எப்படி பார்ப்பது என கதறி வருகின்றனர் ரசிகர்கள்.

சீரியல் நடிகை சித்ரா தற்கொலை – கணவர், சக நடிகர்களிடம் போலீசார் தீவிர விசாரணை!!

அவரின் இந்த தற்கொலைக்கு யார் காரணமாக இருப்பார்கள் என்ற நோக்கிலேயே விசாரணை நடந்து வருகிறது. தற்போது ஹேமந்த்தும், தனக்கு சித்ரா நடிப்பது பிடிக்கவில்லை என்று கூறியது அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. மேலும் சித்ராவிற்கும், ஹேமந்த்திற்கும் 2 மாதங்களுக்கு முன்பே திருமணம் நடந்த நிலையில் அதனை ஏன் மறைக்க வேண்டும் எனவும் கேள்விகள் எழுந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த ஹேமந்த் நல்லவன் கிடையாது என சித்ராவிடம் அவரது தோழி பல முறை கூறியும் அவரை திருமணம் செய்துகொண்டதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்றும் பல கோணங்களில் விசாரணை போய்க்கொண்டுள்ளது. மேலும் சித்ரா தூக்கு மாட்டிக்கொண்ட பிரபல நட்சத்திர ஹோட்டலில் பற்றிய சில தகவல்கள் வந்துள்ளது. அதாவது அந்த ஹோட்டலில் தூக்கில் தொங்குவதற்கு எந்த வசதியும் இல்லையாம். மேலும் ஃபேன் கூட இல்லையாம். அப்படி இருக்க எப்படி சித்ரா தூக்கில் தொங்க முடியும் என பலரும் சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here