சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த சித்தி சீரியலில் தற்போது மீண்டும் புதிய எபிசோடுகள் மறுபடியும் ஆரம்பிக்க இருப்பதாக அதிகார்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
சித்தி
சன் டிவியில் தற்போது சித்தி சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. கவின் வெண்பா ஜோடி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவே சீரியல் சூப்பர் ஹிட். ஆரம்பத்தில் ராதிகாவும் இந்த சீரியலில் இருந்ததால் பல ட்விஸ்டுகளும் இருந்து வந்தது.
மல்லிகா செய்யும் தவறுகளை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்று பல திட்டங்களை போட்டார். ஆனால் தற்போது ராதிகா இந்த சீரியலை விட்டு விலகி விட்டார். ஏனெனில் தேர்தல் வேலைகள் அதிகம் இருந்ததால் இந்த சூழ்நிலை ஏற்பட்டது.
தற்போது சித்தி 2 நிகழ்ச்சியில் இவர் தான் நடிப்பாரா?? அல்லது வேறு ஒருவரை நடிக்க வைப்பார்களா?? என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் ராதிகா இல்லாமலும் இந்த கதையை சுவாரசியமாக கொண்டு சென்றனர். தற்போது கவின் இரட்டை வேடத்தில் கலக்கி வருகிறார்.
மேலும் கவின், வெண்பா ரொமான்ஸ் சீனும் ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தான் சில நாட்களாக லாக்டவுன் காரணமாக சித்தி சீரியலில் ரிபீட் சீன்கள் தான் நடந்துகொண்டிருந்தது. ஆனால் தற்போது மீண்டும் புதிய சீன்கள் திங்கள் முதல் ஒளிபரப்பாக உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.