பல விறுவிறுப்பான கட்டங்களுடன் சித்தி 2 – உண்மையை கண்டறிவாரா கவின்??

0
chithi 2
chithi 2

சன் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சித்தி 2 சீரியல் தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் பல விறுவிறுப்பான கதை களத்துடன் போய்க்கொண்டுள்ளது. தற்போது வெண்பாவின் தாய் தந்தையை பற்றிய உண்மை கவினுக்கு தெரியவருமா?? அல்லது ராஜசேகர் அதனை மறைப்பாரா?? என்பது தான் இன்றைய எபிசொட்.

சித்தி 2:

நமது குழந்தை பருவத்தில் ஒளிபரப்பான ‘சித்தி’ அனைவராலும் பேசப்பட்ட ஒரு சீரியல். இதில் வெள்ளித்திரை நடிகர்களான சிவகுமார், ராதிகா நடித்திருப்பர். அதன் பிறகு ராதிகா பல சீரியலில் நடித்திருந்தார். அவர் கடைசியாக நடித்த வாணி ராணி சீரியலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நீண்ட இடைவெளிக்கு தற்போது சித்தி 2 ஒளிபரப்பாகி வருகிறது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

chithi 2
chithi 2

ஆரம்ப கதையே விறுவிறுப்புடன் சென்றது. லாக்டவுன் காரணமாக தள்ளி வைக்கப்பட்ட சித்தி 2 தற்போது பல விறுவிறுப்பான கட்டங்களுடன் போய்க்கொண்டுள்ளது. தன் பி.ஏ வாக வேலை செய்யும் வெண்பாவின் மீது கவினுக்கு காதல் ஏற்படுகிறது. அந்த காதலை அவர் வெளிப்படுத்துவரா?? மாட்டாரா?? என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் மல்லிகை மற்றும் சித்தி இடையே ஏற்படும் மறைமுகமான தகராறு மும்முரமாக போய் கொண்டிருக்கிறது.

chithi 2
chithi 2

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் வெண்பா தனது அப்பாவிடம் கவலையுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த ராஜசேகர் தன் மகளுக்கு தன்னால் ஆறுதல் சொல்ல முடியவில்லையே என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் உள்ளே வருகிறார் கவின். அதனை கேட்டு அதிர்ச்சியாகி நிற்பது போல எபிசோட் முடிவடைகிறது.

chithi 2
chithi 2

இன்றைய எபிசோடில் கவின் இதனை கேட்டு ஷாக் ஆகி ராஜசேகரிடன் கேள்வி கேட்கிறார். அதாவது வெண்பா உங்க மகள் என்றால் யாழினி யார்? என்று கேட்கிறார். என்ன சொல்வது என்று ராஜசேகர் தடுமாறி நிற்கிறார். ஆனால் கவின் கோபத்துடன் தொடர்ந்து கேள்வி கேட்கிறார். ஆனால் அவர் உண்மையை சொல்வாரா அல்லது வழக்கம் போல உண்மையை மறப்பாரா?? என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் ராஜசேகர் உண்மையை சொல்லப் போவது இல்லை.

chithi 2
chithi 2

அதற்கு பல பொய்களை சொல்லி மறைகிறார். ஆனால் கவின் இதனை முழுமையாக நம்பாமல் சந்தேகத்துடன் பார்க்கிறார். வரும் எபிசோட்களில் உண்மை வெளிப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here