தமிழ் சினிமாவின் “பயில்வான்” என்று அழைக்கப்படும் ரங்கநாதன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே முக்கியமான ஒரு பிரபல நடிகரிடம் அடி வாங்கி உள்ளாராம். இதனை அடுத்து அந்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
“பயில்வான்” ரங்கநாதன்
தமிழ் திரையுலகில் ஹீரோக்களுக்கு பெரும் துணையாக என்றுமே இருப்பது ஸ்டண்ட் மாஸ்டர்கள் மற்றும் சண்டை நடிகர்கள் தான். அவர்கள் ஹீரோவிற்கு மிகவும் பக்க பலமாக இருந்து வருகிறார்கள் என்று கூறினால் அது மிகை இல்லை. இவர்களின் செயல்திறன் காரணமாக தான் ஹீரோகள் திரைக்கு முன்பாக மாஸ்ஸாக இருக்கின்றனர். இவர்களை பற்றி பல முன்னணி நடிகர்கள் அவர்களை பாராட்டியும் கூட இருக்கின்றனர்.
150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு – மத்திய சுகாதாரத்துறை அதிரடி!!
இப்படியாக இருந்தாலும், சண்டை நடிகர்கள் ஷூட்டிங்கின் போது நிஜமாகவே அடிபட்டாலும், அதனை வெளிக்காட்டாமல் நடித்து விடுவர். அப்படி தான் ஒரு முறை தமிழ் சினிமாவின் முன்னணி சண்டை நடிகரான “பயில்வான்” ரங்கநாதனுக்கு அடி விழுந்ததாம். இவர் ஒரு சண்டை நடிகர் மட்டும் அல்ல, ஒரு முன்னணி பத்திரிகையாளரும் கூட. இவர் ஒரு முறை முன்னணி நடிகரான சிரஞ்சீவினியின் படத்திற்கு சண்டை நடிகராக இருந்த போது நிஜமாகவே அவர் இவரை அடித்து விட்டாராம்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனை அனைவர் முன்பும் வெளிப்படுத்தாத ரங்கநாதன் தனியாக சென்று அழுதுள்ளார். அவரை இயக்குனர் பாரதிராஜா தான் ஆறுதல்படுத்தினராம். இந்த செய்தி தற்போது அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.