பூமியை தாக்க வரும் பேராபத்து…!வெளியான அதிர்ச்சி தகவல்!!!

0

பல வித அதிசயங்கள் மற்றும் மர்மங்களை உள்ளடக்கியது தான் பிரபஞ்சம். அதன் மர்மங்களில் பல பலரும் அறியாத ஒன்றாக உள்ளது. இந்நிலையில் 8.5 கோடி டன் எடை கொண்ட விண்கல் ஒன்று பூமியை நோக்கி வருவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். மேலும் இதை அழிக்க சீனா மிக தீவிரம் காட்டுகிறது.

கடந்த 1999 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட இந்த பிரம்மாண்டமான விண்கலத்தின் பெயர் பென்னு ஆகும். மேலும் இந்த சிறுகோள் செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையில் உள்ளது. இந்த விண்கல்லை  ‘விண்வெளி குப்பை’ என்றும் அழைக்கின்றனர். அதன் மேற்பரப்பில் பூமியில் இருக்கும்  அளவை விட பல மடங்கு அதிகமாக தங்கம், பிளாட்டினம் போன்றவை உள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும் இத்தகைய விண்கல் வருகிற 2175 மற்றும் 2199 ஆகிய வருடங்களுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பூமியை தாக்கும்  ஆபத்து உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். அவ்வாறு தாக்கினால்  1,200 மெகா டன் ஆற்றல் அதிலிருந்து வெளிப்படும் எனவும் தெரிவித்து உள்ளனர்.

மேலும் இதன் மூலம் பூமிக்கு மிகுந்த சேதம் ஏற்படும் என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால் இந்த விண்கல்லை அழிக்க சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் திட்டம் வகுத்து உள்ளனர். அதாவது இந்த பென்னு விண்கல்லை நோக்கி 20 க்கும் அதிகமான  ராக்கெட்டுகளை செலுத்தி அதை துண்டுகளாக உடைக்க திட்டம் போட்டு உள்ளது. அதோடு மட்டுமல்லாமல் பூமியை விட்டு திசை திருப்பவும் திட்டமிட்டு உள்ளனர். இந்த ராக்கெட்கள் ஒவ்வொன்றும் 992 டன் எடை கொண்டதாக இருக்கும்  என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த தகவல்கள் மூலம் மிகுந்த அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here