இந்த நவீன உலகத்தில் ஆண், பெண் இருவரும் தங்களின் படிப்பிற்கு ஏற்றவாறு பணிகளை ஏற்று வேலை செய்து வருகின்றனர். மேலும் இப்படியான வேலைகள் பலருக்கு மன அழுத்தத்தை கொடுப்பதால், சொந்தமாக தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இந்த இரண்டு முறைகளிலும் இல்லாத ஒரு விசித்திரமான பணியை சீனாவை சேர்ந்த ”நியாணன்” என்ற 40 வயதான பெண் செய்து வருவதாக கூறியுள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதில் அவர் கூறியதாவது, 15 வருடமாக செய்தி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தேன். அந்த பணி எனக்கு மிகுந்த மன அழுத்தத்தை கொடுத்தது. மேலும் செல்பேசியில் இருந்து அழைப்புகள் வந்தாலே, மனநிம்மதியை இழப்பதாக உணர்ந்தேன். இதை கவனித்த என் பெற்றோர், அந்த வேலையை விட்டுவிடும் படி கூறினார்கள். மேலும் நாங்கள் வாங்கும் ரூ.1.17 லட்சம் ஓய்வூதியத்தில் உனக்கு சம்பளமாக ரூ.47000 கொடுக்கிறோம் என கூறினார்கள்.
இப்படி ஒரு super offer அதுவும் பெற்றோரிடம் இருந்து எனக்கு கிடைத்ததால் அதை ஏற்று கொண்டேன். அந்த வகையில் தற்போது அவர்களின் முழு நேர மகளாய் அவர்களுடன் என் நேரத்தை செலவிட்டு வருகிறேன். மேலும் காலையில் அவர்களுடன் சேர்ந்து dance ஆடுவது, சமையல் செய்வது, அவர்களுக்கு ஒரு driverராக கார் ஓட்டுவது என பல பணிகளை மிகவும் மகிழ்ச்சியாக செய்து வருகிறேன் என கூறியுள்ளார்.