கொரோனா நோய் பரவல் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளால் சீனா, கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் சரிந்து வருகிறது. இதன் காரணமாக குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சீனாவில் புதுமண தம்பதிகளுக்கு ஊதியத்துடன் கூடிய 30 நாட்கள் விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இருந்தாலும் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களுக்காக குழந்தை பெற்றுக்கொள்ள சீனர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு குழந்தைகளை பராமரிப்பதற்காகவும், கல்வி படிப்பு செலவுகளையும் சீன அரசு வழங்கி வருகிறது. இது போக கல்லூரிகளில் காதல் ஜோடிகளுக்கு சிறப்பு விடுமுறை கூட அறிவித்துள்ளனர்.
தமிழக அரசு பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு.., இத கண்டிப்பா செஞ்சே ஆகணும்…அன்பில் மகேஷ் கொடுத்த ஆர்டர்!!
இந்நிலையில் உச்சபட்சமாக திருமணமாகாத பெண்களும் இனி குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என சீன அரசு தெரிவித்துள்ளனர். அதாவது திருமணமாகாத பெண்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு எடுத்துக்கொண்டு செயற்கை கருவுற்றல் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.