சீனாவில் உருவாக்கப்படும் சியோமி Mi 10T 5ஜி ரக ஆண்ட்ராய்டு போன் ஒற்றறியும் நோக்கில் செயல்படுவதாக லிதுவேனிய பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முக்கிய எச்சரிக்கை:
சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும் என்ற எண்ணம் பொதுமக்களிடம் பரவலாக காணப்படுகிறது. ஆனால், அந்த நாட்டின் ஒரு சில தயாரிப்பில் சில ஆபத்துகள் நிறைந்திருப்பது நமக்கு தெரியாத உண்மை. இந்த நிலையில், இந்த நாட்டின் ஆண்ட்ராய்டு ரக போனான சியோமி Mi 10T 5ஜி போனில் வேவு பார்க்கும் நுண்ணறிவுகள் உள்ளதாக லிதுவேனிய பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்கப்படும் இந்த ரக போனில், தைவான் சுதந்திரம் வாழ்க, ஜனநாயக இயக்கம் போன்ற வார்த்தைகளை டைப் செய்தாலோ, அல்லது சம்பந்தப்பட்ட அந்த சொற்கள் பற்றிய பேச்சு, எழுத்துக்கள் வந்தால் அதை உணர்ந்து வேவுபார்க்கும் திறனுடன் இந்த போன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், இந்த போனை தொலைவிலிருந்து இயக்கும் சூட்சமம் உள்ளதாகவும், இந்த தகவல்கள் அனைத்தும் சிங்கப்பூருக்கு மறைமுகமாக அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்