2 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தை தொட்ட கொரோனா – நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்??

0

நம் அண்டை நாடான சீனாவில் பல நகரங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், 7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஷாங்காய் நகரில் முழு ஊரடங்கு அளிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு:

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் பரவி மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது. இதனால், பல அரசுகள் தங்கள் நாடுகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியது. தொற்று பரவல் குறைந்து வந்ததால், பல தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. ஆனால், கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் கடந்த சில தினங்களாக வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வைரஸ் பரவல் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

இதனால், ஹாங்ஹாங் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாகாணங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தியது. இதனை தொடர்ந்து, 45 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஜிலின் நகரில் தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல், 7 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஷாங்காய் நகரிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here