குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் பணி ஜனவரி 3ல் தொடக்கம் – முன்பதிவு தேதியை அறிவித்து மத்திய அரசு அதிரடி!!

0

15 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 3 முதல் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான முன்பதிவு தேதியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பணிகள் தீவிரம் :

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசின் கையில் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி செலுத்துதல் மட்டுமே. அதனால், அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. இந்த வகையில் பெரும்பாலான உலக நாடுகளில் புழக்கத்தில் இருக்கும், 15 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி போடும் பணி இந்தியாவில் தொடங்க உள்ளது.

இது பற்றி அண்மையில் பேசிய பிரதமர் மோடி, ஜனவரி 3ம் தேதி சிறார்களுக்கான தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் எனவும், அதற்கு முன்னதாக அதற்கான முன்பதிவு ஜனவரி 1ம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், இதற்கு முன்பதிவு செய்து கொள்ள கோவின் இணையதளம் சென்று, ஆதார் அல்லது 10 ம் வகுப்பு அடையாள அட்டை பயன்படுத்தி கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இது போக, ஜனவரி 10ம் தேதி முதல் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் எனவும் அரசு உறுதி அளித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here