இந்தியாவில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், பொதுமக்கள் சிரமமின்றி பயணம் செய்வதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்த வகையில் தான் பேருந்து, ரயில் வரிசையில் மெட்ரோ ரயில் சேவையையும் அரசு அறிமுகப்படுத்தியது. இந்த மெட்ரோ ரயில் சேவையும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், சாதாரண ரயில்களில் புதிய வசதி ஒன்றை இணைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது, பொதுவாக குழந்தைகளுக்கு ரயில் பயணம் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால், ரயில்களில் குழந்தைகளுக்கு என தனி இடஒதுக்கீடு ஏதும் இல்லாமல் இருப்பது சற்று ஏமாற்றமாகவே உள்ளது. இந்நிலையில், ரயில்களில் குழந்தைகளுக்கு என தனி இடஒதுக்கீடு குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘தி கேரளா ஸ்டோரி’ பட நடிகை திடீர் விபத்து.., இது திட்டமிட்ட சதியா? இல்ல விதியா? ரசிகர்கள் கேள்வி?
அதாவது, கை குழந்தைகளுக்கான (பேபி பெர்த்) இடஒதுக்கீட்டை ரயில்களில் அமைக்கும் திட்டம் விரைவில் அறிமுகமாக உள்ளது என ரயில்வே தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கான முதல் சோதனை ஓட்டம் கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில், அதில் ஒரு சில மாற்றங்கள் மட்டும் செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டது. இந்த மாற்றங்களை எல்லாம் சரிவர முடித்த பிறகு 2ம் கட்ட சோதனை ஓட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. இதன் முடிவில், ரயில்களில் பேபி பெர்த்தை ஒதுக்கீடு செய்யும் வசதியை பெறலாம் என கூறப்படுகிறது.