தமிழக பொது மக்களுக்கு போக்குவரத்து சேவையை எளிதாக்குவதில், அரசு பேருந்துகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில், கடந்த ஆண்டு முதல் மகளிருக்கு இலவச பேருந்து பயணத்தை அறிவித்த அரசு, குழந்தைகளுக்கும் 5 வயது வரை கட்டணமில்லா விரைவு பேருந்து சேவையை வழங்க தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதன்படி, கடந்த ஆண்டு மே மாதம் முதலே இந்த இலவச பயணம் சேவை திட்டம் அமலுக்கு வந்தது. இதற்கு முன், மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே இலவசமாக பயணிக்க அனுமதி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த திட்டத்தை காண்கணிக்கும் வகையில், விரைவு போக்குவரத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், ஒவ்வொரு மாதமும், விரைவு பேருந்தில் பயணிக்கும் 3 முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் விவரத்தை அனைத்து நடத்துநர்களும் பதிவு செய்து வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், பயணிகளின் விவரங்களை போக்குவரத்து தலைமையகத்துக்கு தெரியப்படுத்தும் போது, பயணம் செய்த குழந்தைகளின் விவரங்களையும் கிளை மேலாளரிடம் அறிவிக்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, திருவண்ணாமலை வழியாக செல்லும் விரைவு பேருந்துகள், திருவண்ணாமலையின் பேருந்து நிலையத்திற்கு செல்லாமல், மாற்று வழியில் செல்வது தெரிந்தால், அந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேலாண் இயக்குனர் கூறியுள்ளார்.